Wednesday, March 30, 2011

யாரோ!!! எவனோ!!!

வருடங்கள் பல கடந்து ,வார்த்தைகள் அதிகம் கடந்து
எண்ணில் அடங்கா எண்ணவேறுபாடுகள்  கடந்து

தலைகனம், தற்பெருமை, திமிர், அகங்காரம்
என அனைத்தையும் நமக்கிடையில் நிர்மூலமாக்கி
உன் நட்பின் ராஜ்ஜியத்தின் உச்சத்தில் என்னை வைத்தாய்.

கேட்காமல் உதவிகள் பல செய்தாய்
தோழன் என்று தலைகனம் கொண்டாய்!!!
என்னை விட அக்கறை கோடி
என் மீது உண்டென்று தற்பெருமை கொண்டாய்!!!

தெளிந்த தரையில் என் பாதம் படும் முன்
நிலத்தை சரி செய்தாய்
என் நலம் காப்பதில் தனி திமிர் கொண்டாய்!!!
தோழர்கள் அனைவரிலும் என் மேல்
அதிகம் உரிமை உண்டென்று அகங்காரம் கொண்டாய்!!!

அவ்வாறு இருக்க, துன்பம் என்று
உன்னிடம் வருந்துகயில், கொக்கரித்தாய்!!!
சலனம் சற்றும் இன்றி,  என் விழி நோக்கி
என்னை "யாரோ!!! எவனோ!!!" என நகைத்தாய்!!!

அத்தருணத்தில் இருந்து எனக்கு
நீயும் அவ்வாறே தெரிகிறாய்!!!
இப்படிக்கு எஸ்ராம்வெண்.

Tuesday, March 8, 2011

நீயே மையமாய் இருக்கிறாய்

Something made me to write the below lines

 

ஒற்றை  கண்ணின் ஓரத்தில்

உன் கரு வண்டினை நிருத்தினாயே ஏன்?

என் கையில் இருக்கும் ஐஸ் கிரீமை பறிக்கவோ?

பட்டும் படாமல் என் தோளில்

உன் பூக் கரத்தால் அடித்தாயே ஏன்?

என் கையில் இருக்கும் ஐஸ் கிரீமை தட்டிவிடவோ?

 

Hmmm….funny eh? so came up with the below  later.

ஒற்றை  கண்ணின் ஓரத்தில்

உன் கரு வண்டினை நிருத்தினாயே ஏன்?

என் கண்கள் நோட்டமிடும், இடம் அறியவோ?

பட்டும் படாமல் என் தோளில்

உன் பூக் கரத்தால் அடித்தாயே ஏன்?

என் முகம் உன் திசை நோக்கவில்லை என்றா?

காக்கை இறகைப் போன்ற உன் கூந்தலை

என் முகம் மீது படரச் செய்தாயே ஏன்?

தூங்காமல் உன்னை ரசிக்க வேண்டும் என்றா?

 

செல்லமே, எத்திசையில் என் முகம் நோக்கினாலும்

எவ்விடத்தில் என் கண்கள் நோட்டமிட்டாலும்

எப்பொழுதில் நித்திரையில் ஆழ்ந்தாலும்- நான்

காணும் இடத்திலும், நோக்கும் திசையிலும்

சிந்திக்கும் எண்ணங்கள் அனைத்திலும்

நீயே மையமாய் இருக்கிறாய்

இப்படிக்கு எஸ்ராம்வெண்