Sunday, March 28, 2010

Paalum Pazhamum - Ponal Pogatum Poda

Moive: Paalum Pazhamum
Lyrics: Kannadasan
Singer: TMS

போனால் போகட்டும் போடா - இந்த

ப்ஹூமியில் நிலையாய் வாழ்தவர் யாரடா?

(போனால் )

வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது

வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது

வாழ்க்கை என்பது வியாபாரம் - அதில்
ஜனனம் என்பது வரவாகும் - வரும்

மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா ...



(போனால்)



இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லையென்றால் அவன் விடுவானா?

உறவைச் சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா?

கூக்குரலாலே கிடைக்காது - இது
கோர்டுக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா...



(போனால்)



எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன் இதற்கொரு மருந்தைக் கண்டேனா?

இருந்தால் அவளைத் தன்னந்தனியே எரியும் நெருப்பில் விடுவேனா?

நமக்கும் மேலே ஒருவனடா - அவன்
நாளும் தெரிந்த தலைவனடா - தினம்
நாடகம் ஆடும் கலைஞ்சனடா
போனால் போகட்டும் போடா ...



(போனால்)



No comments:

Post a Comment